பக்கங்கள்

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

உணர்வுகளை மதிப்போம்

                    என்னுடன் பனி புரியும்  அராபிய நண்பர் ஒருவர் சமீபத்தில் தன குடும்பத்துடன் பிரான்சிற்கு சுற்றுலா  சென்றிருந்தார். அவருடைய பயண அனுபவங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.  பொதுவாக சவுதி அரேபிய நண்பர்கள் தங்கள் மதத்தில் தீவிர நம்பிக்கை உள்ளவர்கள், மற்றும் ஆச்சாரமானவர்கள். இங்கு அரேபிய பெண்கள் தங்கள் முகங்களையும் உடம்பையும் கருப்பு அங்கியால் மூடியிருப்பார்கள். ( எந்த நாட்டு பெண்களும் சவுதி அரேபியா வந்தால் கண்டிப்பாக கருப்பு அங்கி அணிந்து தான் இருக்க வேண்டும்). இது போல உடை அணிந்து பிரான்சில் வெளியே செல்லும் போது  தங்களை இஸ்லாமியர்கள் என்று அறிந்தால் ஏதாவது தொந்தரவு வருமோ என்று அவருக்கு ஒரு பயம் இருந்ததாம். ( உலகம் முழுவதும் ஏதோ அனைத்து இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் என்று மாயையை உருவாக்கி உள்ளார்கள் அல்லவா)
                    ஒருமுறை அவர் தன குடும்பத்துடன் தொடர் வண்டியில் செல்லும்போது அங்கு இருந்த சிற்றுண்டி சாலையில் அவருக்கு பிடித்தமான Mozzarella Sandwich வாங்கலாம் என்று சென்றாராம். சிற்றுண்டி சாலையில் இருந்த விற்பனையாளரிடம் ஆங்கிலம் தெரியுமா என்ற போது தெரியாது என்றிருக்கிறார்.  உடனே நம் நண்பர் அவரிடம் செய்கையில் இது வேண்டும் என்று கேட்டார். விற்பனையாளரோ இது வேண்டாம் என்று செய்கையில் காண்பித்திருக்கிறார். நண்பரோ ஏன் நமக்கு தர மாட்டேன் என்கிறார் என்று மீண்டும் இது இரண்டு வேண்டும் என்று செய்கையில் கேட்டார். உடனே அந்த விற்பனையாளர் நண்பரிடம் ஹராம், ஹராம் என்றிருக்கிறார். ஹராம் என்றால் அராபிய மொழியில் பாவம் என்று பொருள். அந்த சான்விச் பன்றி இறைச்சியால் செய்யப்பட்டது. இஸ்லாமியர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவது  பாவம். அதனால் தான் அந்த விற்பனையாளர் அவரிடம் தரவில்லை. என் நண்பர் இதை கூறி அந்த விற்பனையாளரின் மற்ற மனிதர்களின் உணர்வை மதிக்கக்கூடிய செய்கையை மிகவும் பாராட்டினார். 
                       படிக்கும் காலத்தில் என்னுடன் படித்த ஒரு பிராமின நண்பரின் சாப்பாட்டு பாத்திரத்தில் முட்டையை வைத்து விளையாடி அவன் மத்திய உணவை கொட்டி  விட்டு பட்டினியாக இருந்ததை நினைத்து பார்த்தேன். எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. நண்பா நீ எங்கு இருக்குராயோ அன்று செய்த தவறுக்கு மன்னித்து விடு.
                      நம் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம் அவர்களின் உணர்வையும் மதிக்க வேண்டும். அப்போது தான் மனிதநேயம் வளரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக