நண்பர்கள் அனைவருக்கும் எனது இந்திய சுதந்திர தின வாழ்த்துகள். எப்பொழுதும் இந்த சுதந்திர தினத்தில் எனக்கு இரு நிகழ்வுகள் என் கண் முன் தோன்றும்.
முதலாவதாக நான் முதல் முதலில் கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்தில் நுழைந்த பொது என் கண் முன் தென் பட்ட ஒரு வாசகம். "Freedom is not a license to destroy" அதாவது "சுதந்திரம் என்பது அழிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல" . பல ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனதை விட்டு நீங்காத ஒரு வாசகம்.
இரண்டவதாக நான் முதல் முதலில் சவுதி அரேபியா வந்த போது என்னுடன் பனிபுரியும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது (நண்பர்கள் அனைவரும் எனக்கு முன்பு பல ஆண்டுகளாக பனி புரிபவர்கள்) அவர்களிடம் விரைவில் இந்திய சுதந்திர தினம் வருகிறது அதன் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் பதிலாக " இங்கு இருக்கும் எவரிடம் தேசப் பற்று உள்ளது, நம் நாட்டில் எதாவது அசம்பாவிதம் நடை பெற்றாலோ, பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டாலோ இந்திய பண மதிப்பு குறையும் அப்போது இங்கிருந்து நாம் அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கு அதிக இந்தியப் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள் அல்லது சுதந்திர தின விழா என்று காரணம் காட்டி கூடி கும்மி அடிப்பவர்கள் தானே அதிகம்" என்றார். இது வெளி நாட்டில் வசிக்கும் அனைவரையும் பற்றிய கருத்து அல்ல ஆனால் அநேகரை பற்றிய கருத்து.
முதலாவதாக நான் முதல் முதலில் கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்தில் நுழைந்த பொது என் கண் முன் தென் பட்ட ஒரு வாசகம். "Freedom is not a license to destroy" அதாவது "சுதந்திரம் என்பது அழிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல" . பல ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனதை விட்டு நீங்காத ஒரு வாசகம்.
இரண்டவதாக நான் முதல் முதலில் சவுதி அரேபியா வந்த போது என்னுடன் பனிபுரியும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது (நண்பர்கள் அனைவரும் எனக்கு முன்பு பல ஆண்டுகளாக பனி புரிபவர்கள்) அவர்களிடம் விரைவில் இந்திய சுதந்திர தினம் வருகிறது அதன் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் பதிலாக " இங்கு இருக்கும் எவரிடம் தேசப் பற்று உள்ளது, நம் நாட்டில் எதாவது அசம்பாவிதம் நடை பெற்றாலோ, பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டாலோ இந்திய பண மதிப்பு குறையும் அப்போது இங்கிருந்து நாம் அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கு அதிக இந்தியப் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள் அல்லது சுதந்திர தின விழா என்று காரணம் காட்டி கூடி கும்மி அடிப்பவர்கள் தானே அதிகம்" என்றார். இது வெளி நாட்டில் வசிக்கும் அனைவரையும் பற்றிய கருத்து அல்ல ஆனால் அநேகரை பற்றிய கருத்து.