பக்கங்கள்

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

சுதந்திரம்னா என்ன - சுதந்திர தின சிந்தனை

                   நண்பர்கள் அனைவருக்கும் எனது இந்திய சுதந்திர தின வாழ்த்துகள். எப்பொழுதும் இந்த சுதந்திர தினத்தில் எனக்கு இரு நிகழ்வுகள் என் கண் முன் தோன்றும்.
                   முதலாவதாக நான் முதல் முதலில் கல்பாக்கம் அணுவாற்றல் நகரியத்தில் நுழைந்த பொது என் கண் முன் தென் பட்ட ஒரு வாசகம். "Freedom is not a license to destroy" அதாவது "சுதந்திரம் என்பது அழிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல" . பல ஆண்டுகள் கழிந்த பின்னும் என் மனதை விட்டு நீங்காத ஒரு வாசகம்.
                  இரண்டவதாக நான் முதல் முதலில் சவுதி அரேபியா வந்த போது என்னுடன் பனிபுரியும் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது (நண்பர்கள் அனைவரும் எனக்கு முன்பு பல ஆண்டுகளாக பனி புரிபவர்கள்) அவர்களிடம் விரைவில் இந்திய சுதந்திர தினம் வருகிறது அதன் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும் என்று கேட்டேன். அவர் பதிலாக " இங்கு இருக்கும் எவரிடம் தேசப் பற்று உள்ளது, நம் நாட்டில் எதாவது அசம்பாவிதம் நடை பெற்றாலோ, பொருளாதார விழ்ச்சி ஏற்பட்டாலோ இந்திய பண மதிப்பு குறையும் அப்போது இங்கிருந்து நாம் அனுப்பும் வெளிநாட்டு பணத்திற்கு அதிக இந்தியப் பணம் கிடைக்கும் என்று சிந்திப்பவர்கள்  அல்லது சுதந்திர தின விழா என்று காரணம் காட்டி கூடி கும்மி அடிப்பவர்கள் தானே அதிகம்" என்றார். இது வெளி நாட்டில் வசிக்கும் அனைவரையும் பற்றிய கருத்து அல்ல ஆனால் அநேகரை பற்றிய கருத்து. 

                       "சுதந்திரம் என்பது அழிப்பதற்கு கொடுக்கப்பட்ட அனுமதி அல்ல" பற்றி சிறிது சிந்திப்போம். இன்றும் நம்மில் பலர் சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொண்டோமா என்று தெரியவில்லை. என் பெற்றோர் எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை, என் கணவர் எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை, என் மனைவி  எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை, என் நிர்வாகம்  எனக்கு சுதந்திரம் கொடுக்கவில்லை என்று அநேகர் சொல்ல கேட்டிருக்கிறேன். நம்முடைய சுதந்திரம் அடுத்தவர்களுக்கு சிரமமத்தை கொடுக்கும் போது அதன் பெயர் மீறுதல். அப்படிப்பட்ட மீறுதல் குற்றம், தண்டனைக்குரியது. அதனால் சுதந்திரம் வரையறைக்கு  உட்பட்டது மேலும் கண்காணிப்பிற்கு உரியது. ஆகவே நாம் நம் பெற்றோர் கொடுத்த சுதந்திரத்தை, நம் கணவர்  கொடுத்த சுதந்திரத்தை, நம் மனைவி  கொடுத்த சுதந்திரத்தை, நம் நிர்வாகம்  கொடுத்த சுதந்திரத்தை, நம் நண்பர்கள்  கொடுத்த சுதந்திரத்தை அதன் மதிப்பு தெரிந்து உபயோகித்து அதை மகிமை படுத்துவோம்.
                          வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பற்றிய சிந்தனை, நாம் அனைவரும் வெளிநாட்டில் வசித்துக்கொண்டு ஒரு இந்திய குடிமகனுக்கான பொறுப்புகளில் ( ஓட்டெடுப்பு, வருமான வரி, மற்ற வரிகள்) பங்கேற்காமல், இந்தியாவில் உள்ள துன்பங்களில் பங்கேற்காமல், நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க்காமல் நாம் சம்பாதிக்கும் வருமானத்தை பாதுகாப்பாக சேமிக்கும் கிடங்காகத்தான்  நம் நாட்டை உபயோகிக்கிறோம். நம் நாட்டில் வசிக்கும் சாதாரண குடிமகன் கூட வரி செலுத்தி (வருமான வாரியாகவோ, சாலை வாரியாகவோ, விற்பனை வாரியாகவோ ) நாட்டு வளர்ச்சியில் பங்கு கொள்கிறான்.
                      ஆனால் நாமோ  தங்கமாகவும் நிலத்தில் முதலீடு என்ற பெயரில் விளை நிலங்களை வாங்கி அதை தரிசாக போட்டு நம் வருங்கால வைப்பை பெருக்கிக்கொள்கிறோம். இது நாட்டிற்கு செய்யும் துரோகம் இல்லையா?. இதற்கும் மேலாக இந்தியாவில் உள்ள அறிவு ஜிவிகளாகிய சிலரும் இந்தியாவில் படித்து இந்தியாவிற்கு ஒரு பயனும் இல்லாமல் வெளிநாட்டில் மூளையை அடகு வைத்த கல்பனா சாவ்லா போன்றோரின் பெயரில் விருதுகளும் வழங்கி கேவலப்படுத்துகிறார்கள். ஏன் நம்  நாட்டில் பிறந்து  நாட்டிற்காக உழைத்த பெண்கள் இல்லையா?. 
                     நீ மட்டும் என்ன ஒழுங்கா? என கேட்பவர்களுக்கு "இந்த அறிவு சமீபத்தில் தான் வந்தது. தாமதமாக வந்தாலும் திருத்திக் கொள்ளுவது தானே முறை. எனவே நாமும் நமது நாட்டிற்காக, நாட்டு  வளர்ச்சிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று இந்த சுதந்திர நாளில் சூளுரைப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக